Thursday, June 26, 2014

பட்சி சொன்னால் சரியாயிருக்கும் (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

தைப்பூசம் முடிந்துஒருநாள் இடைவெளிக்குப் பின் மகாத்மா காந்தி நிறுவனத்தில் நான் உரை நிகழ்த்த வேண்டும்.அந்த நாளை அனைவருமே வெகு ஆவலாய் எதிர்பார்த்திருந்தனர்.ஏதோ என்னுடைய உரைக்காக அப்படி காத்திருந்தனர் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.மொரீஷியஸில் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தைப்பூசத்திற்காக நெடுநாட்கள் நோன்பு நோற்கின்றனர்.
மொரீஷியஸ் நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன்

அந்த நோன்பை அவர்கள் நிறைவு செய்வது கொடியிறக்கத்திற்குப் பின்புதான் என்பதால் அந்தநாள் அவ்வளவு முக்கியம்.அந்த நாளும் வந்தது.ச்னிக்கிழமை காலை 10.30 மணி.மொரீஷியஸ் நாட்டின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமைதாங்கினார்.பேராசிரியை மகேஸ்வரி அழகிரி வரவேற்புரை நிகழ்த்த முனைவர் ஜீவேந்திரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.Thirukural and Spirituality என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன்

.திருவள்ளுவர் இன்ன சமயத்தினர் என்று பலரும் பலவாகச் சொன்னாலும் அவர் சமயம் கடந்த ஆன்மீகத்தையே முன்வைத்தார். ஒரு நாட்டின் பிரதேசச் சார்போ மொழிச் சார்போ ஆள்வோர் சார்பு நிலைப்பாடோ சமய நிலைப்பாடோ இல்லாத உலகப் பொதுமை திருக்குறளின்  அதி முக்கிய அம்சம் என்பதை சுட்டிக்காட்டி,அதற்கு சான்றாக கவிஞர் சிற்பி அவர்களின் கவிதை வரிகளை மொழிபெயர்த்து மேற்கோள் காட்டினேன்.
உரையரங்கில்...


Thirukural written by Thiruvalluvar is not just a literary piece.It is the essence of human consciousness.It sees each and every aspect of human life with utmost clarity and presents unshakable solutions for the problems faced by  humanity.Spirituality is the manifestation of supreme consciousness in each living being.Though spirituality uses religions as a vehicle,in a broader sense spirituality is beyond all religions,castes and creed.Similarly Thirukural is aptly known as "Ulaga Podhumarai" which means it is an Universal doctrine.Though written in Tamil Thirukural beholds an Universal outlook .I would like to quote a famous Tamil Poet and scholar,Dr.Sirpi Balasubramaniam,who has beautifully narrated this in his poem.I will first share its translation.It says

"Though written in the language of Tamilians,it does not refers to any kingThough it has couplets of prayer,it does not denote any particular God
 it does not refer to any rituals or religious practices,as Thirukural rises up as the conscience of the whole humanity.

To quote
"செந்தமிழ் நாட்டின் மொழியிலெழுந்தும்
 மன்னவர் பெயரில்லை
தெய்வ வணக்கப் பாடல் சொல்லியும்
திருப்பேர் தரவில்லை
மந்திரம் சடங்கு சமயங்களில்லை
காரணம் ஏதென்றால்
மனித குலத்தின் மனச்சான்றாக
மலர்ந்தது வள்ளுவர் நூல்"
கவிஞர் சிற்பி

திருக்குறள் உலகப் பொதுத்தன்மை வாய்ந்ததென்றாலும் அது ஒவ்வொரு தனிமனிதனிடமும் தோள்தொட்டுப் பேசும் அந்தரங்கமான நூல்.திருவள்ளுவர் தன்னந்தனியாய் தன்னுடன் உட்கார்ந்து உரையாடுவதாய் வாசகர்கள் உணர முடியும்.இந்த பிரத்யேக வழிகாட்டுதல் ஆன்மீகத்தின் முக்கியமான அம்சம்.திருக்குறளின் தனித்தன்மையும் இதுவே.இதையும் கவிஞர் சிற்பியின் கவிதை வரிகளுடன் மேற்கோள் காட்டினேன்.


he power of spirituality lies in its adaptability.A person can see spirituality as a tool to elevate himself or herself even without any religious affiliation.The solace and comfort which spirituality offers at the time of setbacks not only helps a person to bounce back to normality but also provides a clarity about life.To again quote Dr.Sirpi his poetry describes how an individual comes in terms with Thirukural.This is something very similar to spirituality.The translation first

":If i go through a set back or something sad takes place at home
   If my heart burns in the fire of grief
   The old man Thiruvalluvar comes in my mind
   Asks me to rise up,to wipe my tears and cheer up

To quote
"எனக்கொரு நோயும் மனைக்கொரு தீங்கும்
இழவும் வீழ்ச்சிகளும்
இதயத்தின் அடியில் துயரத்தின் நெருப்பும்
எரிந்து கரிந்திடுமேல்
மனத்தினில் வள்ளுவ முதுமகன் வருவான்
மகனே சிரியென்பான்
விழிகளின் கண்ணீர் மாற்றுக என்பான்
துணிவாய் எழு என்பான்"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்னும் முதல் குறளில் "அ" எப்படி இறைவனுக்குச் சமம் என்பதையும் விளக்கினேன். மேலே ஒரு சுழியுடன் உந்தியெழும் எழுத்து மேலே போன வேகத்தில் கீழே இறங்குகிறது.தரையைத் தொட்ட பின் நிதானமாக மீண்டும் மேலெழுகிறது. இப்போது சமநிலையோடு செங்குத்தாகத் திரும்பி தனித்திருக்கும் கோட்டில் சேர்ந்து முடிகிறது.
இது மனித வாழ்வின் குறியீடு. மேலே போகிற மனிதன் அகங்காரத்தால் உந்தியெழுகிறான்.அதே வேகத்தில் கீழே வருகிறான்.இப்போது அனுபவமும் நிதானமும் அவனை மருபடி மேலே உயர்த்துகிறது. சமநிலையோடு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து உண்மையைத் தேடிப் போகிறான். நேர்க்குத்தாக தனித்திருக்கும் கோடு கடவுளின் குறியீடு.அதனுடன் மனிதன் சென்று கலக்கிறான்.

Though there are ten couplets in Thirukural which are captioned as prayer songs they do not glorify God.These ten couplets are ten formulas for a person to bring in Godliness into himself or herself.The very first couplet draws a synonym between God and  the first letter in Tamil அ.

The couplet says as the alphabets start with a the beginning of the world is God,the firat and foremost entity.Now it has a deeper meaning.The Tamil letter a is not just a letter.It is not just a linguistic form.This first letter is the first component of the pranava mantra aum.Now just watch the formation of the alphabet அ.

It begins with a curve and raises up.later it descends to the bottom.Then it raises up again.From there it moves as a horizontal line and merges with a line which stands all alone and tall.Now what does this signify?This shows the graph of the human life.A person gets equipped and goes up in life.Once  growth happens ego takes the lead and immediately the person comes down.After the downfall,a kind of clarity descends and again the person goes up.Now there are no ups and downs.Instead of trying to win the soul goes in search of its own source.The straight horizontal line denotes this search.Once this search is intense the soul finds God standing alone and merges with it.
This is the significance of the letter அ.

அவையினர் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டேயிருந்தனர். புலால் மறுத்தல் பற்றி விலாவாரியாகப் பேசத் தொடங்கியதும் அதிர்ந்தனர். அடுத்த நாள் விரதம் முடிக்கப் போகிறவர்களல்லவா பாவம். அவையின் ஏகோபித்த ஆதரவையொட்டி அதற்கடுத்த திங்கள் மகாத்மா காந்தி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த என் உரையினை பொதுமக்களுக்கான நிகழ்ச்சியாக மாற்றி அறிவித்தார், மகாத்மா காந்தி நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் பிஜய மதாவ். மகாத்மா காந்தி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி விதோத்மா கூஞ்சல் மகாத்மா காந்தி நிறுவன  நூல்களைப்பரிசளிக்க, அந்நிறுவனத்திற்கு என் நூல்களைப் பரிசளித்தேன்
மேலும் இரண்டு நாட்கள் .மொரீஷியஸின் ஞாயிற்றுக்கிழமையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்
(தொடரும்)

Monday, June 23, 2014

கண்டதுண்டோ இவன் போலே



கவிதையின் உயரம் ஆறடி-எனக்
காட்டிய மனிதனைப் பாரடி
செவிகளில் செந்தேன் ஊற்றிய கவிஞன்
சேய்போல் வாழ்ந்ததைக் கேளடி

எடுப்பார் கைகளில் பிள்ளைதான் -அவன்
எதிர்கொண்ட தெல்லாம் தொல்லைதான்
தொடுப்பான் சொற்களை சரம்சரமாய் அதில்
நிகராய் ஒருவர் இல்லைதான்

நெற்றியில் நீறுடன் குங்குமம்-அவன்
நிற்கும் கோலமே மங்கலம்
பற்றுகள் ஆயிரம் உற்றிருந்தாலும்
பரம்பொருளுடனவன் சங்கமம்

அழுததும் சிரித்ததும் ஆயிரம்-அவன்
அவஸ்தையும் மகிழ்ச்சியும்காவியம்
பழுதுகள் அறியாப் பாடல்கள் தந்தவன்
பொன்மனம் தமிழின் ஆலயம்

மண்மிசை  கவிஞர்கள் தோன்றுவார்-தங்கள்
மேதைமை மிளிர்ந்திடப் பாடுவார்
கண்ண தாசனைப் போலெவர் இனியென்று
காலங்கள் தோறும் கூறுவார்

Tuesday, June 17, 2014

கோவையில் கண்ணதாசன் விழா


கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.


 கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 87ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு 22.06.2014 அன்று மாலை 5.30 மணியளவில் கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்கிறது.

இவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், பாடகி வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பொற்கிழியும்பட்டயமும் கொண்ட இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.


 இவ்விழாவிற்கு மதுரை தியாகராஜர் குழு நிறுவனங்களின் தலைவர் திரு.கருமுத்து.தி. கண்ணன் தலைமையேற்று விருதுகளை வழங்குகிறார்.விழாவில் முதல்முறையாக இசைவடிவில் கவியரசு கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்" இசைத்தகடு வெளியிடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு. ம. கிருஷ்ணன் வெளியிட  ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திருமதி மலர்விழி பெற்றுக் கொள்கிறார்.

எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன், திரு.காந்தி கண்ணதாசன்,இசைக்கவி ரமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.திருச்சியை சேர்ந்த கவிஞர் நந்தலாலா சிறப்புரை நிகழ்த்துகிறார்.முன்னதாக செல்வி பிரியதர்ஷினி ராஜசேகர் வழங்கும் "கவிநயம் அபிநயம்"நிகழ்ச்சி நடைபெறுகிறது. திரு.குணசேகரன் வரவேற்றுப் பேசுகிறார்.திரு.தேவ.ஸ்ரீநிவாசன் நன்றி நவில்கிறார்.எழுத்தாளர் கனகதூரிகா தொகுத்து வழங்குகிறார். 


இது கண்ணதாசன் கழகத்தின் ஏழாம் ஆண்டுவிழா.கடந்த ஆறாண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் எழுத்தாளர்கள் திரு.அசோகமித்திரன்,திரு.வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திரு.நாஞ்சில்நாடன்,
திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,  ஆகியோரும், கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் டி.ஆர்.எம்.சாவித்திரி,திரு.சீர்காழி சிவசிதம்பரம்,பதிப்பாளர் திரு பி.ஆர்.சங்கரன்,கவிஞரின் உதவியாளர் திரு.இராம.முத்தையா ஆகியோரும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர்.

Thursday, June 12, 2014

சத்குரு சத்சங்கம்

ஸ்வரங்களில் எழாத சங்கீதம்-உன்
அருளெனும் ராக சஞ்சாரம்
குரல்கள் அதன்சுகம் காட்டவில்லை-எந்த
விரல்களும் அதன்லயம் மீட்டவில்லை

மேகங்கள் தொடாத முழுவானம்-எந்த
மேதையும்பெறாத திருஞானம்
யோகங்கள் உணர்த்தும் சிவரூபம்-இங்கு
யாரறிவார் உன் முழுரூபம்

உந்திய கருணையில் ஓடுகிறேன் -நான்
உன்பேர் சொல்லிப் பாடுகிறேன்
விந்தைகள்நிகழ்த்தும் விடுகதையே-உன்
விரல்தொடும் போதிலென் விடுதலையே

பன்னிரு திருமுறை பாடுவதை-அருள்
பரமானந்தர்கள் நாடுவதை
உன்னிரு கண்களில் காணுகிறேன் -இந்த
உன்னதம் உயிரினில் பேணுகிறேன்

விந்தியம் இமயம் கைலாயம்-அந்த
வேதவேதன் இருக்குமிடம்
உந்தன் இதயம் அவைபோலே-அந்த
உத்தமன் கோயில் கொள்ளுமிடம்
 


உன்னில் பொங்கிடும் பாற்கடலை-நீ
ஒருதுளி எம்மில் பாய்ச்சுகிறாய்
கன்றின் பசிக்குப் பக்குவமாய்-அதை
குவளைப் பாலாய் காய்ச்சுகிறாய்

சத்குரு உனது சத்சங்கம்-அந்த
சபையில் சத்தியம் அமர்ந்திருக்கும்
தத்துவச் சுடரே உன்னொளியில்-அங்கு
தாமாய் உயிர்கள் மலர்ந்திருக்கும்