Friday, September 2, 2011

செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்


Sadguru

பல்லவி

உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
உன்னை வைக்கத்தான்
வெள்ளம் போலே நீநுழைந்தாய்
நானும் மூழ்கத்தான்
கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
கண்ணெதிர் வருகிற கனவே கனவே
எல்லை இல்லா இன்பம் இங்கே
உன்பேர் சொல்லித்தான்

சத்குரு பாதங்கள் சரணடைந்தேன்
சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன்

சரணம் 1

எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே
எல்லாத் திசையிலும் நடந்தேனோ
எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன்
எவ்விதம் உன்னை அடைந்தேனோ

மூச்சினில் கலந்தது உன்கருணை
பேச்சினில் வருவது உன்கவிதை
காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும்
கேட்டதைத் தருவதும் உன்மகிமை 

சரணம் 2

ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்
ஆடிக் குலுங்கிய பயணமோ
பாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கி
போனதும் எத்தனை தூரமோ
பாதையின் முடிவில் உனதுமுகம்
பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்
நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
நிகழ்ந்ததில் தொலைந்தது  வினையின் கனம்

4 comments:

நிலாமகள் said...

ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்ஆடிக் குலுங்கிய பயணமோபாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கிபோனதும் எத்தனை தூரமோபாதையின் முடிவில் உனதுமுகம்பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்நிகழ்ந்ததில் தொலைந்தது வினையின் கனம்//

குருவே ச‌ர‌ண‌ம்!

Vasanth said...

really superb anna :)

Vision Unlimited said...

பக்தியினால் வந்து விழுந்த வைர வரிகள்
பாய்ந்து வந்த பயமும் ஓடிடும் குதிரைகள்
பரவச நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் இன்ப நதிகள்
thank you ji

Rama said...

Anna, After hearing the song on Alai with music. The Song pulls me like a magnet. Listening the whole song again and again. No words to express the simple yet profound lyrics. Thanks anna for such an wonderful flow of rhyming lyrics.