Saturday, July 26, 2014

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் எழுதிய கவிதை


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதுகு வலி காரணமாக கோவை கங்கா மருத்துவமனையில் ஜுலை 22 அன்று அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி மற்றும் மூட்டு அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவர் திரு.எஸ்.ராஜசேகர் ஜூலை 23 அதிகாலை அறுவை சிகிச்சை நிகழ்த்தினார்.

மூன்றே நாட்களில் முழுமையாக குணமடைந்த கவிஞர்,இன்று மாலை (ஜுலை 26) மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.இன்று காலை கங்கா மருத்துவமனையை வாழ்த்தி கவிஞர் எழுதிய கவிதை தத்ரூபா கிராஃபிக்ஸ் நிறுவனத்தாரால் வடிவமைக்கப்பட்டு மருத்துவர் திரு.ராஜசேகரிடம் வழங்கப்பட்டது.

கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன்,திருமதி கனகவல்லி சண்முகநாதன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம.கிருஷ்ணன் மற்றும் மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான அலுவலர்களும் மருத்துவர்களும் செவிலிகளும் திரண்டு வந்து கவிஞரை வாழ்த்தி வழியனுப்பினர்.
அந்தக் கவிதை இது..
  விடைபெறும் முன்னர் மருத்துவர்கள் குழுவிற்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார் கவிஞர்.

மருத்துவர் ராஜசேகர் கேட்டுக் கொண்டபடி கவிதையின் நகலில் கையொப்பமிட்டுத் தருகிறார் கவிஞர்.அருகில் மருத்துவமனை தலைவர் டாக்டர்.ஜே.ஜி.சண்முகநாதன்