Tuesday, July 29, 2014

கள்வன் சொல்லும் கதை




வான்மீக உயரத்தில் ஒரு வாக்கியத்தையேனும்
வடித்துக் கொடுக்கும் விருப்பத்தோடு
தான்கண்ட வாழ்வைத் திறந்து வைக்க
எத்தனித்தஅதே நேரத்தில்,

தெய்வ மாக்கவி பட்டம் எல்லாம்
எட்டா உயரம் என்பதை உணர்ந்து...
பெயருக்கு முன்னால் திருடன் என்று
பெருமையும் பணிவும் பொங்கப் பொங்க
போட்டுக் கொள்ளும் பக்குவம் கருதியே....
பாராட்டு விழாவும் பட்டமளிப்பும்
பார்த்துப் பார்த்து செய்யலாம் தானே....

திருடன் மணியன் பிள்ளைக்கு...