Sunday, April 26, 2015

அந்தப் புதிர்





திரளும் முகில்கள் தயங்கி நடக்கும்
உருளும் தேர்களாய் உயரே அசையும்.
எந்தப் பரப்பில் எந்த நொடியில்
விழுவதென்றே வியூகம் அமைக்கும்.
சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா?
எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும்.
எம்மழை எவ்விடம்...என்பது எவர்வசம்
அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம்.