Wednesday, April 29, 2015

தனித்தனி இல்லை



பெரிதாய் எதையும் சொல்வதற்கில்லை
பெரிதென எதையும் சொல்வதுமில்லை
சிறிதாய் எதுவும் தோன்றவுமில்லை
சிறுமையும் பெருமையும் அவரவர் எல்லை

பொதுவாய் எதையும் சொல்வதற்கில்லை
பொதுவெனசொல்பவை பொதுவும் இல்லை
நதிநிலம் கடலெதும்நமக்கென இல்லை
நாமில்லாமலும் நதிநிலம் இல்லை

விரல்களுக்குள்ளே வித்தைகள் இல்லை
வித்தையில்லாத விரல்களும் இல்லை
நிரல்களை நம்பி நிமிடங்கள் இல்லை
நிகழ்கணம் இருக்கையில் நிமிடங்கள் இல்லை

எவரும் எதையும் மாற்றுவ தில்லை
எவருக்கும் எதுவும் மாறுவ தில்லை
தவறோ சரியோ தொடருவதில்லை
தவறும் சரியும் தனித்தனி இல்லை