Tuesday, July 20, 2010

ஈகை

உன்... தோள்பை நிறையத் தங்கக்காசுகள்.
ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல்
விரல்களை இழுத்து வலியப் பிரித்து
எல்லார் கையிலும் திணித்துப் போகிறாய்.
கொடுப்பது உனக்குக் கடமை போலவும்
வாங்கிக் கொளபவர் வள்ளல்கள் போலவும்
பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத்
தங்கக் காசுகள் தந்துகொண்டிருக்கிறாய்.
திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து
தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே
பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய்.
கைகள் வழியக் காசு கொடுக்கையில்
ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால்
பதறி எடுத்துக் தூசு துடைத்து
வணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய்.
போகும் அவர்கள் பின்னால் ஓடி
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.
தன்னையே கொடுத்து வருந்தி நிற்கிறாய்.
போகும் அவர்கள் பின்னால் ஓடி
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.
தன்னையே கொடுக்கத் தவிக்கும் கொடையுளம்
வெளிப்படும் விதமாய் வழங்கிச் செல்கிறாய்.
உனது பார்வையில் படும்படியாக
விரிந்து நீண்டு தவிக்குமென் விரல்களில் - ஒரு
செப்புக் காசாவது போட்டிருக்கலாம் நீ!!!

No comments: