Tuesday, September 28, 2010

உன்கருணை- என் நிலைமை

பத்திரம்  மிக்கது
பத்திரம் அற்றது
உன் கருணை
 
நித்தியம் மிக்கது
நிச்சயம் அற்றது
என்நிலைமை
 
பூவென மலர்வது
பூகம்பம் அதிர்வது
உன் கருணை
 
சுடரென ஒளிர்வது
சருகென அலைவது
என் நிலைமை
 
வாவென அணைப்பது
வாள்கொண்டு துளைப்பது
உன்கருணை
 
தேவையில் நலிவது
தேடலில் பொலிவது 
என்நிலைமை
 
 
கேள்வியில் கிடைப்பது 
கேள்விகள் அழிப்பது
உன்கருணை
 
தோல்வியில் ஜெயிப்பது
தோற்பதில் சிலிர்ப்பது
என்நிலைமை
 
 ஒன்றும் சொல்லாதது
ஒன்றும் தள்ளாதது
உன் கருணை
 
ஒன்றி நில்லாதது
எங்கும் செல்லாதது
என்நிலைமை
 
அச்சம் இல்லாதது
ஆனால் பொல்லாத
உன்கருணை
 
உன்னை நீங்காதது
உள்ளே தூங்காதது
என் நிலைமை

1 comment:

நிகழ்காலத்தில்... said...

நெருக்கமாக உணர்கிறேன்...