Saturday, April 28, 2012

மதுரை வாராய் மகேசா

மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா
மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா
குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா
குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா
உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க
உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா
புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா
பரமேசா விடையேறி விரைவாய் நீவா

மாடத்தில் ஒளிர்கின்ற விளக்கின் மேலே
மண்ணள்ளிப் போட்டால்தான் ஒளிரும் என்று
மூடத்தின் முழுவெல்லை கண்டவர்கள்
முதலறிக்கை தந்துவிட்டார் முதலே நீவா
பீடத்தின் அரும்பெருமை புரிந்திடாமல்
பிட்டத்தை இதுவரையில் வைத்துத் தேய்த்தோர்
ஓடத்தைக் கவிழ்க்குமுன்னே ஓடி நீவா
உத்தமனே உன்பெருமை காக்க நீவா