Wednesday, September 16, 2015

எங்கள் இறைவா சரணம்

களிற்று வடிவே கலியின் முடிவே
கண்ணிறை அழகே சரணம்
ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே
ஒப்பில் முதலே சரணம்
துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே
துணையே திருவே சரணம்
களிக்கும் மகவே கருணைக் கனலே
கணபதி  நாதா சரணம்

சந்தம் செழித்த செந்தமிழ் உகந்த
சந்தனப் பொலிவே சரணம்
தந்தம் ஒடித்த தயையே எங்கள்
தலைவிதி அழிப்பாய் சரணம்
விந்தை நிகழ்த்தும் வித்தக நலமே
வெற்றியின் தலைவா சரணம்
சிந்தை திருத்தி ஆலயமென்றால்
சரியென்று நுழைவோய் சரணம் 

புரங்கள் எரிப்போன் ரதமே தடுக்கும்
புயவலி உடையோய் சரணம்
வரங்கள் அருளும் விநாயக மூர்த்தி
வண்ணத் திருவடி சரணம்
சுரங்கள் இசையும் சுகமே எங்கள்
சுந்தர வடிவே சரணம்
இருளை வழங்கும் எழிலார் ஒளியே
எங்கள் இறைவா சரணம்