Monday, February 7, 2011

கர்ணன்-4


கிழக்கில் கதிரவன் உதிக்கையில் மகனாம்
கர்ணன் துதிப்பான் உவகையிலே
நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும்
கண்ணதாசன் கவிதையிலே

(ஆயிரம் கைகள் நீட்டி-பாடல்)

சூரிய வணக்கம் செய்கிற வேளையில்
குரலொன்று கேட்டது வாசலிலே
காரியம் ஒன்று நடத்திட இந்திரன்
வந்தான் யாசகன் வடிவினிலே
வந்தவன் பகைவன் என்பதைத் தந்தை
வகையாய்ச் சொன்னான் மகனுக்கு
எந்தப் பொருளையும் இல்லை என்கிற
எண்ணம் இல்லையே இவனுக்கு

ஒட்டிப் பிறந்த கவச குண்டலம்
தானம் கேட்டான் இந்திரனே
வெட்டி எடுத்து அடுத்த நொடியே
வழங்கி விட்டான் மன்னவனே
கொற்றவன் கர்ணன் கொடைக்குணம் பார்த்து
பூக்களைப் பொழிந்தது ஆகாயம்
குற்ற உணர்வுடன் கூனிக் குறுகி
இந்திரன் சென்றான் மேலோகம்
தொடரும்.......

No comments: