Tuesday, April 15, 2014

வயதுக்கேற்ற வாழ்க்கை




 பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது
இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது
முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது
 நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது
ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது
அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது
எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது
எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது
தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது
நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது...

( "ஆனந்தம் ஆரம்பம்" கவியரங்கில் வாசித்தது)