Sunday, November 15, 2015

சஷ்டி நாயகன் சண்முகன்.4. அறுபடை முருகன்



சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுடனான அலைபேசி உரையாடலில் முருக வழிபாடு பற்றிப் பேச்சு வந்தது.பாரதம் முழுவதும் இருக்கும் முருக வழிபாட்டை சுட்டிய அவர், முருனை மிழ்க்வுள் என்று சொல்து பற்றிவிவாங்ளை ரிரு சொற்ளில் சுட்டினார்.

தொல்காப்பி காத்திற்கு முன்பிருந்தே முருழிபாடு மித்தில் உண்டு. சினை நாட்டினர் "ஹர் ஹர் ஹாதேவ்வ்" என்னும் முன்ரே வன் தென்னாடுடைசினாக இருந்திருக்கிறான். சிவன் ,முருகன் இருருமே மிழ்ச்ங்த்தில் ங்காற்றியிருக்கிறார்கள்.

"கூடல் புரந்தொருகால் கூடல் புரெதிர் 
பாடல் அறிவித்டைவேள்"

முருகன் கொண்டாடப்டுகிறான். காளிதாரின் காலம் ரியாணிக்கப்டாசூலில், குமாசம்வம் பாடிய அருக்கும் முன்பே ங்க இலக்கித்தின்  முனூலாகிதிருமுருகாற்றுப்டையை நக்கீரர் எழுதியிருக்வேண்டும் என்று தோன்றுகிது.

மேலும் நாட்டுக் கந்தன் பிரம்மச்சாரி. தென்னாட்டிலோ வள்ளி   தெய்வானை மேவள்ளல்.(தென்னாட்டில் விநாகர் பிரம்மச்சாரி.நாட்டிலோ சித்தி புத்தி மேநாகர் )

திருமுருகாற்றுப்டை முருனின் அறுடை வீடுளை ரிசைப்டுத்துகிது, முதல் படைவீடு திருப்பரங்குன்றம், இரண்டாம் படைவீடு திருச்செந்தூர், மூன்றாம் படைவீடு பழநி(திருவாவின்குடி), நான்காம் படைவீடு சுவாமிமலை, ஐந்தாம் படைவீடு திருத்தணிகை, ஆறாம் படைவிடு பழமுதிர்ச்சோலை.

இந்தத் தலங்கள் கந்த புராணத்தின் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் கதை வைப்பு முறையில் இந்தத் தலவரிசை அமையவில்லை. ஆனாலும் முருக வழிபாட்டில் இந்த வரிசையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

கந்தர் அனுபூதியில்,
" உல்லாச,நிராகுல,யோக இத
   சல்லாப விநோதனும் நீயலையோ" என்கிறார் அருணகிரிநாதர்.

இதில் உல்லாசம்- திருப்பரங்குன்றம்(தெய்வானை திருமணம்)நிராகுலம்-திருச்செந்தூர் (சூர சம்ஹாரம்) யோகம்- பழநி (ஆண்டிக் கோலம்) இதம்(சுவாமிமலை) சல்லாபம் -திருத்தணி (வள்ளி திருமணம்) விநோதம் பழமுதிர்சோலை.(சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்னும் விநோத விளையாட்டு?)

நக்கீரரின் சிறைவாசம் நீக்க வேல்விடுத்ததையும் தமிழ்க்கடவுளின் தமிழ்நேயமாக காண்பதுண்டு.

"பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி
 வரைக்குகையை இடித்துவழிகாணும்" என்று வேல்வகுப்பில் அருணகிரிநாதர் பாடுகிறார்.

"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்"   என்று கந்தரலங்காரத்திலும் அவரே பாடுகிறார்.

அறுபடை வீடுகளைப் பாடிய நக்கீரர்,அதே திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஆறு திருமுகங்களும் என்னென்ன செய்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

உலகின் இருள் போக்கும் கதிர்போன்ற ஒருமுகம்,பக்தர்களுக்கு வரமருளும் ஒருமுகம்,வேள்வி நெறி காக்கும் ஒருமுகம்,நிலவு போல் ஒளிரும் ஒரு முகம்,வீரம் விளைவிக்கும் ஒருமுகம்,வள்ளியம்மையுடன் பேசி நகைக்கும் ஒருமுகம் என்று வரிசைப்படுத்துகிறார். 

 மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்துவரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் . .100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அம்மூஇரு முகனும்

இங்கே உங்களுக்கு திருவண்ணாமலை திருப்புகழ் நினைவுக்கு வரும்.

ஏ றுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.



 முருகனின் திருமுகங்கள் தொழிற்படுதல் பற்றிப் பாடுகிற மரபு நக்கீரரில் தொடங்கி கவியரசர் கண்ணதாசன் வரை வளர்ந்து பொலிகிறது.


 மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


என்று பாடுகிறார் கவியரசர்.

(இந்தத் தாக்கத்தில் என் முதல் நூலாகிய "வேலின் வெளிச்சத்தில்"என்னும் கவிதைத் தொகுப்பில் கோவை அருகே தென்சேரிமலை அடிவாரத்திலுள்ள
குகைபாலதண்டாயுதபாணியைப் பற்றிய பாடல்களில் ஆறு முகங்களைக் குறித்தொரு பாடல் எழுதினேன். அதற்கான சுட்டி இது.)
 http://marabinmaindanmuthiah.blogspot.in/2010/08/2.html

குமர குருபரரின் கந்தர் கலிவெண்பா கந்தனைத் துதித்து தமிழ்ப்புலமையும் கவிபாடும் ஆற்றலும் பெறலாம் என்று சொல்கிறது.

 "பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்
 சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்.
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை
 எழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்"

குமரகுருபரரே வாய் பேச முடியாத குழந்தையாய் இருந்து முருகப் பெருமான் அவர் நாவில் வேல்கொண்டு ஆறெழுத்து எழுதியதால் கவிபாடும் ஆற்றல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியத்தின் முதல்நூலே முருகனை நோக்கி உலகத்தவரை ஆற்றுப்படுத்தும் நூலாக,அறுபடை வீடுகளுக்குமான ஆற்றுப்படையாக அமைந்தது தமிழர்களின் முத்திரைத் தெய்வமாக முருகன் இருப்பதன் அடையாளம்.

பல ஆண்டுகளுக்கு முன் செட்டிநாட்டில் முருகனைப் பற்றி ஒரு கவியரங்கம். கவிஞர் ஆத்தங்குடி சோமு என்று நினைவு. அவர் சொன்னார்.

'தனக்கென்று வீடுகள் தனித்தனியே ஆறிருந்தும்
வீட்டுவரி கட்டாத வேலவன் முருகன் மேல்
பாட்டு வரி கட்டப் புறப்பட்டு வந்தவர்நாம்"

(வருவான்)